4 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை!

சப்ரகமுவ மாகாணத்திற்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இன்று மதியம் 1 மணிக்குப் பின்னர் இந்தப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும். இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *