நைல் நதியில் படகு கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழப்பு

வடக்கு சூடானில் உள்ள நைல் நதியில் பயணிகள் படகு மூழ்கியதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 30 பயணிகளை ஏற்றிச்சென்ற படகானது, தைபா அல் – கவாட் மற்றும் டெய்ம் அல் கராய் ஆகிய கிராமங்களுக்கிடையிலேயே படகு பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீட்புக் குழுவினரின் நடவடிக்கையில் சுமார் 21 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

எஞ்சியவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *