நிலவும் மோசமான வானிலை காரணமாக அலவதுகொட பொலிஸ் பிரிவின் அங்கும்புர பகுதியில் மற்றுமொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
அங்கும்புர – அலவதுகொட வீதியில் உள்ள ரம்புக் எல பகுதியில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மண்சரிவு காரணமாக மக்கள் இடம்பெயர்வு மற்றும் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது, ஆனால் இதுவரை குறிப்பிட்ட தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிராமத்தில் சுமார் 800 குடும்பங்கள் வசித்து வந்ததாகவும், ஏராளமானோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு குழுக்கள் இதுவரை சம்பவ இடத்தை அடைய முடியவில்லை என்றும் அலவதுகொட பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கண்டி, அரநாயக்க – அம்பலாங்கந்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 120 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் 20 குழந்தைகளும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மண்சரிவு காரணமாக சிக்கியுள்ளவர்களை மீட்பதில் சிரமம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அதேவேளை, வெலிமடை, கெப்பட்டிபொல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக வெலிமடை – நுவரெலியா வீதி தடைபட்டுள்ளது.
இந்நிலையில், இராணுவமும் பொலிஸாரும் தற்போது சடலங்களைத் தேடி வருவதாவும் இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
