கிழக்கு முன்பள்ளிகளுக்கு நவம்பர் 30 ஆம் திகதி வரை பூட்டு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 30 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது

கிழக்கு மாகாணத்தில் நிலவும் அசாதாரண காலநிலையினைக் கருத்திற் கொண்டு 26 இம் திகதி முதல் 30 வரை முன்பள்ளி பாாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்பள்ளிப் பணியகத்தின் பொது முகாமையாளர் கே.ஜெயவதனன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண பணிப்பாளர், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், பிரதேச செயலகங்களின் முன்பள்ளி செயற்றிட்ட உத்தியோகத்தர்களுக்கும் இது தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *