மட்டக்களப்பு – புகையிரத நிலையத்தின் விடுதி பகுதியில் இன்று (29) திடீரென தீப்ற்றியதையடுத்து மட்டு. நகரசபை தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்
குறித்த பகுதியில் இன்று (29) பகல் 12 மணியளவில் அந்த பகுதியிலுள்ள புல் தரைகளில் தீ பரவ ஆரம்பித்து, பனை மரங்கள் மற்றும் மரங்களில் பற்றியதுடன் புகையிரத எஞ்சின் திரும்பும் பகுதி மற்றும் புகையிரத பெற்றோல் தாங்கி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பகுதியை நோக்கி தீ பரவத் தொடங்கியது.
இதனையடுத்து மாநகரசபை முதல்வர் சிவன் பாக்கியநாதன் மற்றும் உறுப்பினர்கள் தீயணைப்பு படையினர் மற்றும் இராணுவத்தினர் சுமார் 2 மணித்தியாலம் போராடி தீயை கட்டுப்பட்டிற்குள் கொண்டுவந்தனர்.