சிறையில் இருக்கும் பிள்ளையான் அவசரமாக மருத்துமனையில் அனுமதி!

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் இதனை இலங்கையிலுள்ள தனியார் செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். 

சுகயீனம் காரணமாக நேற்று(15.04.2026) பிற்பகல் அவர் சிறைச்சாலை மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், அவர் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *