நாட்டில் சில பாலர் பாடசாலைகளுக்கு விடுமுறை

ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஊவா மாகாண முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் காலவரையின்றி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பாடசாலை ஆரம்பமாகும் தகவல் தொடர்பில் அறவிக்கபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *