ஊடகவியலாளர்களை தனது சகோதர சகோதரிகளாகக் கருதுவதாகக் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளின் டி ஜயதிஸ்ஸ இன்று (21) தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக அரசாங்க தகவல் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட எசிதிசி பியர ஊடகப் பயிற்சி பட்டறையில் தொடக்க உரையை நிகழ்த்தும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, ஊடக சுதந்திரம் மற்றும் ஊடக தொழில்முறையைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தொடர்ந்து உறுதியாக உள்ளது என்றும், தேசிய ஊடகக் கொள்கையை உருவாக்க அனுமதிப்பதன் மூலம் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களை அனைத்து தரப்பிலிருந்தும் பாதுகாக்கும் என்றும் கூறிய வெகுஜன ஊடக அமைச்சர், ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை நிறுவனத்தை நிறுவ ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஊடக மேம்பாட்டிற்காக இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 2.6 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.