குடும்பஉறுப்பினர்களால் புறக்கணிக்கப்படும் சிரேஷ்ட பிரஜைகள் பற்றிய தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்களை 070 789 88 89 என்ற வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக தெரிவிக்கமுடியும்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 ஆம் திகதியை “உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினம்” என்று அறிவித்துள்ளதையடுத்து முதியோருக்கான தேசிய செயலகம் இந்த திட்டத்தைத் தொடங்கியுள்ளது.