கொழும்பு மாநகரசபையின் மேயரை தெரிவுசெய்யப்படுவதற்கான வாக்கெடுப்பு கொழும்பு மாநகர சபையில் ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக முகமது ரிசா சாருக் முன்மொழியப்பட்டார்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பாக சுறை கெலி பல்சதார் முன்மொழியப்பட்டார்.
அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியினர் திறந்த வாக்கெடுப்பை கோரிய நிலையில், ஆளுங்கட்சியினர் இரகசிய வாக்கெடுப்பை கோரினர். இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.