கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் 7600 சட்டவிரோத சிகரெட்டுகளை கொண்ட 28 அட்டைப்பெட்டிகளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (08) இரவு நடத்தப்பட்ட சோதனையின் போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் எலபடகமவைச் சேர்ந்த 20 வயதுடையவர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக விமான நிலையப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.