ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டம்

ஈரானிய அணுசக்தி நிலையங்களைத் தாக்க இஸ்ரேல் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.  ஈரானிய அணுசக்தி நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு சமீப காலமாக கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது

ஈரானுடன் அணுசக்தி திட்டம் தொடர்பாக இராஜதந்திர ஒப்பந்தத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

 இந்நிலையில் இஸ்ரேலின் மூத்த அதிகாரிகளிடமிருந்து பொது மற்றும் தனியார் தகவல்தொடர்புகள், இஸ்ரேலிய தகவல்தொடர்புகள் மற்றும் உடனடி தாக்குதலைக் குறிக்கக்கூடிய இஸ்ரேலிய இராணுவ நகர்வுகள் குறித்த அவதானிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் உளவுத்துறை  இந்த தகவலைவெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் கண்காணிப்பின்படி இராணுவ

தயாரிப்புகளில் வான் வெடிமருந்துகளின் இயக்கம் மற்றும் ஒரு வான் பயிற்சியின் நிறைவு ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஈரானின் உயர்  தலைவர் அயதுல்லா அலி கமேனி, தெஹ்ரான் யுரேனியத்தை செறிவூட்டுவதை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைகள் ஏற்கமுடியாதவை  என்று  விமர்சித்து கூறியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன,

இந்நிலையில்  புதிய அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறுமா என்பது குறித்து சந்தேகங்கள் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *