இந்தியா – பாகிஸ்தான் முரண்பாட்டைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கான வெற்றிலை ஏற்றுமதி தடைசெய்யப்பட்டுள்ளமையின் காரணமாக, பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக வெற்றிலைச் செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த சிக்கலுக்கு தீர்வுகாண உறுதியான நாளொன்று இல்லாமையின் காரணமாக விவசாயிகளால் மீண்டும் பயிர்ச்செய்கை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த நிலைமை தொடர்பில் விளக்கமளித்த வெற்றிலை செய்கையாளர்களை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் டபிள்யூ. எல். சரத் சந்திரசிறி, ஆயிரம் வெற்றிலைகள் 25,000 ரூபாவுக்கு பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எது எவ்வாறாயினும் இந்திய பாகிஸ்தான் முரண்பாடு முடிவடையும் வரை பொறுமையாக காத்திருக்க முடியாது என்பதால் இங்கிலாந்து, ஜெர்மன் போன்ற பல ஐரோப்பிய நாடுக ளுக்கும் மாலைத்தீவு, மலேசியா போன்ற நாடுகளிலும் வெற்றிலைக்கு பெரும் கேள்வி நிலை எழுந்துள்ளதால் அந்த நாடுகளுக்கு வெற்றிலையை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் அவர் கோரியுள்ளார்.