காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: இராணுவம் தக்க பதிலடி!

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து 3ஆவது நாளாக நேற்றும் (26) அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய இராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது.

இது குறித்து இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஏப். 26 – 27 நள்ளிரவில் இந்தியா – பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்களை நடத்தியது. டுட்மாரி கலி மற்றும் ராம்பூர் மண்டலங்களின் அருகே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானின் இந்த தாக்குதல்களுக்கு இந்திய இராணுவ வீரர்கள் பதிலடி தாக்குதல்கள் நடத்த  எதிர்வினையாற்றியிருப்பதாக இராணுவம் இன்று(ஏப். 27) வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *