ராஜஸ்தானில் பாடசாலை கட்டடம் இடிந்து விழுந்து 4 மாணவர்கள் உயிரிழப்பு – 40 பேர் படுகாயம்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாடசாலை கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,

ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டம் மனோகர் தானாவில் உள்ள பிப்லோடி அரச பாடசாலையில் காலை 8.30 மணியளவில் மேற்கூரை இடிந்து அங்கு அமர்ந்திருந்த மாணவர்கள் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தின் போது, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தவிர சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதுடன் 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

மேலும், கட்டட இடிபாடுகளில் சிக்கிய மாணவர்கள், ஆசிரியர்களை மீட்கும் பணியில் உள்ளூர்வாசிகள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *