இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில்வே நிருவகத்தின் பதவிக்கான புதிய நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (05) ரயில்வே திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது ரயில்வே பதவி III ஆம் தரத்திற்கு 100 புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய, ரயில்வே திணைக்கள அதிகாரிகள் மற்றும் அமைச்சின் ஒன்றிய ஒருங்கிணைப்பு செயலாளர் எஸ்.பி. விதானகே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
