வளைகுடா எரிவாயு மையங்கள் மீது ஈரான் தீவிர தாக்குதல்

சவுதி அரேபியா, கட்டார், குவைட் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள் மீது ஈரான் நேற்றையதினம் தீவிர தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஒரே நாளில் சுமார் 6க்கும் மேற்பட்ட எரிவாயு மையங்கள் குறிவைத்து தாக்கப்பட்டதால், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததுடன், வளைகுடா நாடுகளை நேரடியாக போருக்கு இழுக்கும் அபாயமும் உருவானது.

உலக மசகு எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதம் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஏற்கெனவே முடக்கியுள்ள ஈரான், வளைகுடா நாடுகளின் எரிசக்தி உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்ததால், உலகளாவிய விநியோகச் சங்கிலிக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்க்க, சவுதி அரேபியா தனது எண்ணெய் ஏற்றுமதியைச் செங்கடல் வழியாக மாற்றியிருந்தது. 

ஆனால், செங்கடல் துறைமுக நகரமான யான்புவில் உள்ள சாம்ரெஃப் சுத்திகரிப்பு நிலையமும் ஈரானின் தாக்குதலுக்கு இலக்கானது. 

இதன் சேத விவரங்களை சவுதி பாதுகாப்பு அமைச்சகமும் ஷெல்; நிறுவனமும் ஆய்வு செய்து வருகின்றன. 

ரியாத் மற்றும் கிழக்கு மாகாணங்களை நோக்கி வந்த 6 ட்ரோன்களை சவூதி அரேபியா இடைமறித்து அழித்தது.

கட்டாரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு நிலையமான ராஸ் லஃப்பான் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. 

இதனால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கட்டார் எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்தச் சேதத்தினால் எரிவாயு விநியோகம் சீராக சில ஆண்டுகளாகும் என அஞ்சப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *