மட்டு. பாலமீன்மடு புதுமை மிகு குழந்தைஇயேசு ஆலயத்தில் இரத்ததான முகாம்

மட்டக்களப்பு பாலமீன்மடு புதுமை மிகு குழந்தை இயேசு ஆலய பரிபாலனசபை மற்றும் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் ஆகியோரின் ஏற்பாட்டில் தவக்கால முயற்சியாக இரத்ததான முகாம் உதிரம் கொடுத்து உயிர்காப்போம் எனும் தொணிப்பொறுலில் இன்று நடைபெற்றது.

குழந்தை இயேசு ஆலய பரிபாலனசபை மற்றும் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினரால் 02 வது வருடமாக முன்னெடுக்கப்பட்டு வரும் இவ் மனிதாபிமான செயற்பாடானது ஆலய பங்கு தந்தை அருட்பணி மெருஷன் ஹென்றிக் அடிளாரரின் தலைமையில் நடைபெற்றது.

இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவின் வைத்தியர், இரத்தவங்கி ஊழியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது பாலமீன்மடு; கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் பரிபாலன சபையினர், பாலமீன்மடு; பங்குமக்கள்
, கிராமவாழ் மக்கள் என 24 குருதிக்கொடையாளிகள் குருதிக்கொடை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் பங்கு சமுகத்தினால் தொடர்ச்சியாக இவ்வாரான மனிதாபிமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *