நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இன்று இடம்பெற்றது. மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து நாட்டிற்காக உயிர் நீத்த உறவுகளுக்கு ஒரு நிமிட அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன் போது அரசாங்க அதிபர் அவர்கள் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
பின்னர் உத்தியோகஸ்தர்களினால் மாவட்ட செயலக வளாகத்தில் பயன்தரு மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் உத்தியோகஸ்தர்களுக்கு மூலிகை மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாலர்களான திருமதி சுதர்சினி ஸ்ரிகாந் மற்றும் திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது விசேட தேவையுடையவர்களுக்கு அரசாங்க அதிபரினால் சக்கர நாட்காலியும் வழங்கப்பட்டது.