மட்டக்களப்பு மாநகர 15ஆம் வட்டாரத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகம் நேற்று மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் இணைப்புச்செயலாளரும் தமிழரசு கட்சியின் வேட்பாளருமான டினேஸ் குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கலந்து கொண்டார்.
இதன்போது மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட 15ம் வட்டாரமான நாவற்குடாவில் இலங்கை தமிழரசு கட்சிசார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் இணைப்புச்செயலாளர் டினேஸ் குமார் மற்றும் நாகராஜா அவர்களுடன் இணைந்து தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
நிகழ்வில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், கட்சியின் தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்;.