மட்டக்களப்பு சிறையிலிருந்து 16 கைதிகளுக்கு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை!

வெசாக் தினத்தையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 16 கைதிகள் இன்று (12) காலை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் என். பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என். பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்று விடுதலை செய்யப்பட்ட கைதிகளாவர். விடுதலை செய்யப்பட்ட கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நன்றி செலுத்திய பின்னர் வீடுகளுக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *