மட்டக்களப்பு அமிர்தகழி கருணை பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா இடம்பெற்றது

மட்டக்களப்பு அமிர்தகழி கருணை பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

கருணை பாலர் பாடசாலை அதிபர் திருமதி பிரதீபா தர்சன் தலைமையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டு விழா நிகழ்வில் சிறார்களின் விளையாட்டுக்கள் மற்றும்
கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதன்போது மாணவர்கள் இரண்டு இல்லங்கலாக பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கான தனி விளையாட்டுக்கள் மற்றும்
குழு விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன.

இல்ல விளையாட்டு விழாவில் முதலாம் இடத்தினை நீல நிற பிலு வேல் இல்லமும் இரண்டாவது இடத்தினை சிவப்பு நிற ரெட் பயர் இல்லமும் பெற்றன.
இதன் போது மாணவர்களுக்கு வெற்றி கிண்ணங்களும் பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டது.

நிகழ்வில் முன்கல்வி பணியக கள அலுவலர் எஸ்.பரணிதரன், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் திறமைகளை வெளிகொணரும் முகமாக இவ் பாலர் பாடசாலையில் இவ்வாரான செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *