மட்டக்களப்பில் யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியிலேயே 35 வயதான பெண் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் நடைபெற்ற நேற்றைய தினம் (04) இரவு 7.00 மணியளவில் வீட்டு முற்றத்தில் தனது மூன்று வயது குழந்தையுடன் குறித்த பெண் இருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த யானை அவர்களை தாக்கத் தொடங்கியுள்ளது. 

யானை தாக்குதலில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு அவரது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளது. 

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் குழந்தையை மீட்டதுடன் தாயின் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *