களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நேற்று (02) கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
தனது குடும்பத்தினருடன் நேற்று கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த கடல் அலை அவரை இழுத்துச் சென்றதாகவும் பின் அவர் பார்வையிலிருந்து மறைந்துவிட்டதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காணாமல் போனவர் புத்தல, யுதகனாவ பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
எனவே காணாமல் போன மாணவரை தேடும் பணிகளில் பாணந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
