நோர்வேயில் தனியார் விண்வெளி நிறுவனம் அனுப்பிய ரொக்கெட் கடலில் விழுந்தது சேதம்

விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவதில் உலக நாடுகள் பலவும் போட்டிப்போடுகின்றன. இந்த போட்டியில் தற்போது பல தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்துள்ளன.

அந்தவகையில் ஜெர்மனியைச் சேர்ந்த இசார் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனமானது நோர்வேயில் இருந்து சோதனை அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் என்ற ரொக்கெட்டை ஏவியது. ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட முதல் ரொக்கெட் இதுவாகும்.

திட்டமிட்டபடி அந்த ரொக்கெட் விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தது. 30 நொடிகள் வானில் பறந்த அந்த ரொக்கெட் பின்னர் சுழன்றடித்துக் கொண்டு கடற்பகுதியில் விழுந்தது. எனினும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ரொக்கெட் எட்டியதாக இசார் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *