சீரற்ற காலநிலையால் 685 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களில் 187 குடும்பங்களைச் சேர்ந்த 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், புத்தளம் மாவட்டத்தின் மாரவில மற்றும் சிலாபம் பகுதிகளில் நீரில் மூழ்கி நால்வர் உயிரிழந்துள்ளதுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 460 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் திருகோணமலை, புத்தளம் மற்றும் காலி மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், 177 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *