சிரிய தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் – 20 பேர் பலி; 53 பேர் படுகாயம்

சிரியாவின் தலைநகர் டமாஸ்கசின் புறநகர் பகுதியான டுவைலாவில் ”மார் எலியாஸ்” என்ற தேவாலயத்தில் நேற்று (22) குண்டுதாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தேவாலயத்தில் மக்களோடு மக்களாக இருந்த ஒருவர் குறித்த தற்கொலை குண்டுதாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள்ன.

இந்த தாக்குதலில் தேவாலயத்தில் இருந்த 20 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 53 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குண்டுவெடிப்பில் பலியின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *