கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம்-மட்டு. பாலமீன்மடு கடற்கரையில் சிரமதானம்

‘சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்’ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக அவர்களின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் நடலாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


இதன் ஓர் அம்சமாக ‘சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்’ நிகழ்ச்சித்திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்கரையை அன்மித்த 23 பிரதேசத்தில் சுத்தம் செய்யும் வேலை திட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த வேலை திட்டத்தின் பிரதான பகுதியாக பாலமீன்மடு பகுதியில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ் வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர், அரசாங்க அதிபர் காணி, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர், மாநகர சபை ஆணையாளர், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முப்படை வீரர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள், இளைஞர்கள், மீனவ சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது ஐந்து குழுக்களாக பிரித்து பிளாஸ்டிக், உக்கக்கூடிய கழிவுகள் மற்றும் கண்ணாடி போத்தல்கள் என வெவ்வேறாக கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் கழிவுகளை துப்புரவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *