ரத்கம வெல்ல துறைமுகத்திலிருந்து இன்று (27) காலை இரு தனித்தனி படகுகளில் புறப்பட்ட ஐந்து மீனவர்கள் கடலில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீனவர்கள் இன்று அதிகாலையில் கடலுக்குச் சென்று திரும்பி வரவில்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை காணாமல் போயுள்ள மீனவர்களை தேடுவதற்கான மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு இலங்கை கடற்படை கப்பலொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
