ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம் : சரியும் ஆசிய பங்குகள் – வலுவடையும் அமெரிக்க டொலர்

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்து வருவதால், பெரும்பாலான ஆசிய பங்குச் சந்தைகள் மேலும் சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக ஆசியப் பங்குச் சந்தைகள் இன்று (03.03.2026) சரிவைச் சந்தித்துள்ளன.

ஜப்பானின் நிக்கேய் (Nikkei) பங்குச் சந்தை ஆரம்பத்திலேயே 327.44 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 57,729.80 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

தென் கொரியாவின் கோஸ்பி (KOSPI) குறியீடு 78.98 புள்ளிகள் (1.26%) குறைந்து 6,165.15 புள்ளிகளாகத் தொடங்கியது.

தைவானின் தைவான் பங்குச் சந்தையும் சரிவுடன் ஆரம்பமானது. உலகின் முன்னணி AI சிப் தயாரிப்பு நிறுவனமான TSMC பங்குகள் ஆரம்பத்தில் 5% உயர்ந்த போதிலும், பின்னர் சரிவைச் சந்தித்துள்ளன.

ஏனைய சந்தைகளுக்கு மாறாக, ஹொங்கொங்கின் ஹாங் செங் (Hang Seng) குறியீடு 130.39 புள்ளிகள் உயர்ந்து 26,190.24 ஆக ஆரம்பமானது.

இதே வேளை முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதி டொலரை நோக்கித் திரும்பியதால், சர்வதேச சந்தையில் அமெரிக்க டொலர் வலுவடைந்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் எரிபொருள் விலைகள் உயரும் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதே இந்தச் சரிவுக்கு முக்கிய காரணமாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *