இந்தோனேசியாவில் வெடி விபத்து – 13 பேர் பலி !

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு ஜாவா மாகாணத்தில் கருத் மாவட்டத்தில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தபோது  குறித்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.   

இந்த வெடிவிபத்தில் 4 இராணுவ வீரர்கள், பொதுமக்கள் 9 பேர் என மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும் வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டதாக இராணுவ தகவல் சேவைத் தலைவர் தெரிவித்தார்.

குறித்த வெடி விபத்து நடந்த இடம் அங்குள்ள குடிமக்களுக்கு  முற்றிலும் பாதுகாப்பானதாக மாறும் வரை, தற்போது அங்கு கிருமி நீக்கம் செயல்முறை நடைபெற்று வருவதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *