அமெரிக்காவுடனான பழைய உறவுகள் முடிந்துவிட்டது – மார்க் கார்னி

அமெரிக்காவின் வர்த்தகப் போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற கனடா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மார்க் கார்னி பதவியேற்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் உரையாற்றிய மார்க் கார்னி, அமெரிக்காவுடனான பழைய உறவு முடிந்துவிட்டதாக தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி எங்களை சிதைக்கப்பார்க்கின்றார் அதன் மூலம் அமெரிக்கா எங்களை உரிமையாக்கலாம் என அவர் கருதுகின்றார் என தெரிவித்துள்ள மார்க் கார்னி இது ஒருபோதும் நடக்காது என தெரிவித்துள்ளார்.

லிபரல் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து ஒட்டாவாவில் ஆதரவாளர்களுடன் பேசிய மார்க் கார்னி,

“அமெரிக்காவுடனான பழைய உறவு முடிந்துவிட்டது. அமெரிக்கா செய்த துரோகத்தின் அதிர்ச்சியில் இருந்து நாம் மீண்டுவிட்டோம். ஆனால், நாம் கற்றுக்கொண்ட பாடங்களை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. நாம் நம்மை கவனித்துக் கொள்ள வேண்டும்.

இந்த வர்த்தகப் போரில் நாம் வெற்றி பெறுவோம். அமெரிக்கா நம்மை சொந்தமாக்கிக் கொள்வதற்காக நம்மை பிளவுபடுத்த ட்ரம்ப்  முயற்சிக்கிறார். அது ஒருபோதும் நடக்காது.” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *