வெளியான சிவப்பு எச்சரிக்கை.. பதுளையில் அனைத்து பாடசாலைகளையும் மூட நவடிக்கை

பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் இன்று (09) காலை 11 மணிக்குள் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை விடுமுறை எடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வானிலை ஆய்வுத் துறையால் வெளியிடப்பட்ட அண்மைய முன்னறிவிப்பு மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பால் வெளியிடப்பட்ட மண்சரிவுகள் தொடர்பான சமீபத்திய சிறப்பு எச்சரிக்கை அறிவிப்பின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இவ்வாறு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

நிலவும் மோசமான வானிலை காரணமாக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், எதிர்வரும் நாட்களில் நிலவும் சூழ்நிலையைப் பொறுத்து எதிர்கால முடிவுகளை எடுக்க அனைத்து அதிபர்களுக்கும் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *