ஹப்புத்தளை வீதி விபத்தில் இரு வெளிநாட்டுப் பெண்கள் படுகாயம்

ஹப்புத்தளை – வெலிமடை பகுதியிலுள்ள அசோகராமய கோயிலுக்கு அருகில் நடந்த வீதி விபத்தில் இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் படுகாயமடைந்து தியத்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (29) மாலை குறித்த பயணிகள் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுவரில் மோதியுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 80 மற்றும் 76 வயதுடைய

சுற்றுலாப் பயணிகளே இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *