வடக்கு – கிழக்கு உட்பட நாடு முழுவதும் செயலிழந்துள்ள தொலைபேசி அழைப்பு

இலங்கையில் வெள்ளபெருக்கில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொலைபேசி அழைப்புக்கள் செயலிழந்துள்ளன. 

அதேவேளை, இணைய வசதிகளும் முற்றுமுழுதாக செயலிழந்துள்ளன. 

இந்நிலையில், பொதுமக்கள் இது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், குறித்த மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகள், மின்சார துண்டிப்பு, அங்குள்ள இணைய வசதிகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாகவே தொலைபேசிகள் செயலிழந்துள்ளன. 

இந்த விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *