மீண்டும் புதிய கொரோனா அலையா?

கடந்த 2019ம் ஆண்டில் உலக நாடுகளை ஆட்டுவித்த கொரோனா வைரஸ் தொற்றை யாரும் மறந்துவிட முடியாது. அதன் பாதிப்புகள், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஏராளம்.

உலகின் பெரும்பாலான நாடுகள் மறந்துவிட்ட கொரோனா தொற்று தற்போது சிங்கப்பூர், ஹாங்காங்கில் அதிவேகமாக பரவி வருகிறது. அண்மைக்காலமாக பதிவாகி வரும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை இதை உறுதி செய்கிறது.

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 28 சதவீதம் கொரோனா தொற்றுகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மே 3ம் தேதியுடன் முடிந்த வாரத்தில், 14,200 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை கூறி உள்ளது. இதேபோல தாய்லாந்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது இந்தியாவின் பல பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 93 பேரும், தமிழகத்தில் 18 பேருக்கும் கொரோனா தொற்று பரவி உள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது வரை இந்தியாவில் 02 போர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *