வவுனியா சமயபுரம் பகுதியில் நேற்று (03) மனைவியையும் அப்பெண்ணின் தாயாரையும் கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா சமயபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு நேற்று இரவு வருகைதந்த உயிரிழந்தநபர் வீட்டில் இருந்த பெண்ணையும் அவரது தாயாரையும் கத்தியால் குத்திகாயப்படுத்தியுள்ளார். அதனைத்தொடர்ந்து வீட்டினை தீயிட்டு கொழுத்தியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த இரு பெண்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபர் அந்த வீட்டின் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் வீழ்ந்தாரா அல்லது வேறு எதும் குற்றச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதா என்பது தொடர்பாக பொலிசாரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படு வருகின்றது.
இதேவேளை உயிரிழந்த நபரும் காயமடைந்த பெண்ணும் ஏற்கனவே வெவ்வேறு திருமணங்களை முடித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.