சீரற்ற காலநிலை – அனைத்து உள்நாட்டு போட்டிகளையும் ஒத்திவைக்க தீர்மானம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள அனைத்து உள்நாட்டு போட்டிகளையும் ஒத்திவைக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி, மேஜர் கிளப் ரி20 போட்டி, டயர் ‘பி’ ரி20 போட்டி மற்றும் கவர்னர்ஸ் கிண்ணம் ஆகியவை ஒத்திவைக்கப்படும்.

மேலும், திருத்தப்பட்ட அட்டவணைகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *