அமைச்சகங்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிட 7 துறைசார் குழுவொன்றை நிறுவ முடிவு

அனைத்து அமைச்சகங்களின் செயல்பாடுகளையும் மேற்பார்வையிட பத்தாவது பாராளுமன்றத்தில் 7 துறைசார் மேற்பார்வைக் குழுக்களை நிறுவ பாராளுமன்ற விவகாரக் குழு முடிவு செய்துள்ளது.

இந்தக் குழுவின் ஏழு தலைவர் பதவிகளில் மூன்று பதவிகள் எதிர்க்கட்சிக்கும், நான்கு பதவிகள் ஆளும் கட்சிக்கும் வழங்கப்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாராளுமன்ற விவகாரக் குழுவின் சமீபத்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த 7 துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் நிறுவப்படுகின்றன.

மேலும், மாற்றுத்திறனாளி சமூகத்தின் சார்பாக பணியாற்ற ஒரு பாராளுமன்ற மன்றத்தை நிறுவுமாறு பாராளுமன்ற உறுப்பினர்களான சுகத் வசந்த டி சில்வா மற்றும் டொக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் குழு அங்கீகரித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *