800 லீற்றர் டீசல் பதுக்கிய ஊழியர் கைது!

ஆலையடிவேம்பு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில், சட்டவிரோதமான முறையில் டீசலைப் பதுக்கி வைத்திருந்த ஊழியர் ஒருவர் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை, ஆலையடிவேம்பு பகுதியில் அமைந்துள்ள குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாரிய அளவில் எரிபொருள் பதுக்கப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையின் போது, எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மறைவான பகுதியில் கொள்கலன்களில் நிரப்பப்பட்டிருந்த 800 லீற்றர் டீசல் கண்டுபிடிக்கப்பட்டது.

சட்டவிரோதப் பதுக்கல் தொடர்பில் அங்கு கடமையாற்றிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட டீசல் மற்றும் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *