இஸ்ரேல் விமானப் படையின் போர் விமானங்கள் லெபனானின் பெகா பகுதியில் அமைந்த சுரங்கப் பாதை மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது.
சிரியா மற்றும் லெபனான் பகுதிகளை இணைக்க கூடிய இந்தச் சுரங்கம் வழியே ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதங்களை கடத்துகிறது என இஸ்ரேல் குற்றச்சாட்டு கூறி வருகிறது. கடந்த காலங்களிலும் இந்த சுரங்கப் பாதை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சுரங்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் தடுக்கும் வழிகளை மேற்கொள்வோம் .என இஸ்ரேல் உறுதி கூறியுள்ளது. இஸ்ரேலுக்கு உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்த கூடியது என கூறப்படும், ஆயுதங்கள் மற்றும் ரொக்கட் லோஞ்சர்கள் அடங்கிய பல்வேறு இடங்கள் மீதும் விமானங்கள் தாக்குதலை நடத்தின.
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் உள்ள சூழலில், இதனை மீறும் வகையில் இந்த தாக்குதல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. .