மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமா? அரசின் நிலைப்பாடு

தற்போதைய சூழ்நிலையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் எதர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி தெரிவித்தார். 

இன்று (08) பாராளுமன்றத்தில், வைத்து சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு அமைய எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? என்று பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்கு பதிலளித்த அமைச்சர், மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றாலும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு மின்சாரக் கட்டணங்களிலிருந்து கிடைக்கும் பங்களிப்பு அதிகமாக உள்ளது என்று கூறினார். 

இருப்பினும், அடுத்த மாதத்தின் முதல் வாரத்திற்குள் இந்த விடயத்தில் சரியான கருத்தை தெரிவிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார். 

“வீடுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் மிகக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்க நாங்கள் உண்மையிலேயே விரும்புகிறோம்.” அதுதான் எங்கள் முதன்மையான குறிக்கோள். 

நாங்கள் குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ கூடாது என்ற நோக்கத்துடன் தான் செயல்படுகிறோம். 

ஏனென்றால் நாங்கள் இந்த சூழ்நிலையிலேயே செயற்படுகிறோம். நாங்கள் எங்கும் IMF கூறியதாக அதிகரிக்கவில்லை. 

அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மின்சார சபை இன்னும் கணக்கீடுகளை சமர்ப்பிக்கவில்லை. 

இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பொதுப் பயன்பாட்டு ஆணையக்குழுவிடம் அதைப் பெறுவோம். 

இன்னும் முடிவு செய்யவில்லை. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம், அதிகரிக்க மாட்டோம் என்று. 

ஆனால் மறுபுறம் பல விடயங்கள் உள்ளன. கடன் இருக்கிறது. கடன் தொகையில் ஒரு பகுதியை மின்சார கட்டணத்தில் சேர்க்க வேண்டும். 

அடுத்த மாத தொடக்கத்தில் நாங்கள் உங்களுக்கு இது குறித்து கூறமுடியும். “அரசாங்கம் எதிர்மறையான இடத்தில் இல்லை.” இல்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *