மட்டக்களப்பு மாநகர 6ஆம் வட்டாரத்தில் தமிழரசு கட்சியின் அலுவலகம் நேற்று மாலை உத்தியோகபுஸ்ரீர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட கருவேப்பங்கேணி, ஜெயந்திபுரம் ஆகிய கிராமங்களை ஒன்றிணைக்கும் ஆறாம் வட்டாரத்தில் தமிழரசு கட்சியின் வேட்பாளர்களான தனுஷபிரதீப் மற்றும் தோமஸ் கந்தையா அவர்களுடன் இணைந்து தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.
கட்சியின் மூத்த உறுப்பினர்கள், கட்சியின் தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.