பெருந்தொகை ஆயுர்வேத மருத்துவப் பட்டதாரிகள் சேவையில் இணைப்பு

சுகாதார மருத்துவ அதிகாரிகள் உட்பட மொத்தம் 303 பட்டதாரிகள் இன்றையதினம், இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான நிகழ்வு, கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், உள்ளூர் ஆயுர்வேத சுகாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோயாளி சேவைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, 2018ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆயுர்வேதத் திணைக்களத்துக்குள் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு இது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்படுவோர், மூத்த ஆயுர்வேத நிபுணர்களின் கீழ் விரிவான பயிற்சியைப் பெற்றுள்ளனர்,

அவர்கள், சிறுநீரகம் தொடர்பான நிலைமைகள் உட்பட தொற்று மற்றும் தொற்று அல்லாத நோய்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மத்திய அரசு மற்றும் மாகாண ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *