புத்தாண்டு காலத்தில் மட்டுபடுத்தப்பட்ட கடவுசீட்டு சேவைகள்

ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் வழக்கமான கடவுசீட்டு சேவைகளுக்கான டோக்கன்கள் வழங்குவது கட்டுப்படுத்தப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த நாட்களில் நண்பகல் 12 மணி வரை மட்டுமே சேவைகள் வழங்கப்படும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஒரு நாள் கடவுசீட்டு சேவையின் கீழ் வழங்கப்படும் 24 மணி நேர சேவை இந்தக் காலகட்டத்தில் செயல்பாட்டில் இருக்காது என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *