முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பஸ்ஸின் சாரதி மீது நேற்றிரவு இவ்வாறு வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயணிகளை இறக்குவதற்காக பஸ் நிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவரினால் இவ்வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சாரதி, தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.