பலத்த மின்னல் தாக்கத்துடன் மழை

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் மற்றும் பலத்த மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வௌியிட்டுள்ளது. 

இந்த அறிவிப்பு இன்று (21) இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *