இலங்கை விமானப்படையின் 7ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த பெல் 212 ஹெலிகொப்டர் இன்று (09) காலை பயிற்சியின் போது மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியது.
இவ்விபத்தில் இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு இந்த சம்பவத்திலிருந்து உயிர் தப்பினர்.
மாதுறு ஓயாவில் இலங்கை இராணுவ விசேட படையினரின் பயிற்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற பயிற்சியின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.