நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் பேருந்து கோர விபத்து – 08 பேர் பலி

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் 05 ஆண்களும் 03 பெண்களும் உயிரிழந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். 

பேருந்து சாரதி உட்பட 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

விபத்தில் இறந்த எட்டு பேரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *