நுவரெலியாவில் குடிபோதையில் பஸ் ஓட்டிய சாரதி விளக்கமறியலில்

இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பஸ்ஸை குடிபோதையில் ஓட்டிச் சென்ற சாரதி ஒருவர் நேற்று (03) நுவரெலியா பொலிஸாரால் சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள சோதனையின்போது கைதுசெய்யப்பட்டார்.

திவுலபிட்டி டிப்போவுக்கு சொந்தமான இந்த பஸ் வெளிமடையிலிருந்து நுவரெலியா வழியாக மீகமுவ நோக்கிப் பயணித்தது.

சாரதி சட்டவிரோத மதுபோதையில் வாகனம் செலுத்தியதுடன், அவரது இருக்கையின் பின்புறம் 750 மில்லி சட்டவிரோத மதுபானத்தை வைத்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, இன்று (04) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சாரதியை, எதிர்வரும் ஓகஸ்ட் 18 வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *